எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேருதவியால் கடந்த 20.08.2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராசல்கைமா மண்டலம் சார்பாக சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து வருகைதந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக்குழு உறுப்பினர்
சகோதரர் எம்.எஸ். சுலைமான் அவர்கள் ‘ரமலானிலும் – ரமலானிற்கு பிறகும்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் சுமார் 115 சகோதரர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ். ரமலானை முன்னிட்டு ராசல்கைமா மண்டலம் சார்பாக 21.8.2010 முதல் தொடர் சொற்பொழிவு நடத்தப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது.