அல்லாஹ் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மன்டலத்தில் முஸ்ஸஃபா கிளையின் மர்க்கஸான கிளீன்கோ ”சி” கேம்ப் பள்ளியில் வைத்து வாரந்தோறும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.
கடந்த ஜனவரி மாதத்தில் 01-01-10 அன்று சகோ செம்படையார் குளம் மன்சூர் அவர்கள் திருக்குர்ஆன் அத்தாட்சிகள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
அதை தொடர்ந்து 08-01-10 அன்று சகோ பயாஸ் அவர்கள் அபுபக்கர் (ரலி) அவர்களின் வரலாறு என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்,
அதை தொடர்ந்து 15-01-10 அன்று அடவங்குடி சகோ முஹம்மது கலில் அவர்கள் சொர்க்க வாசி என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்,
அதை தொடர்ந்து 22-01-10 அன்று தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டல செயலாளர் சகோ அபதுல் சலாம் அவர்கள் இஸ்லாம் ஏற்படுத்திய புரட்சி என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
அதை தொடர்ந்து 29-01-10 சகோ முஹம்மது ரபிக் அவர்கள் வெட்கம் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.