தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு கிளையில் நேற்று (26-1-2010) இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.
இதில் நகரின் காவல் துறை அதிகாரிகள் உட்பட நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுனார். மாநிலச் செயலாளர் அப்துர் ரஜ்ஜாக் அவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு இஸ்லாமிய பார்வையில் இரத்த தானம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
ஆண்கள் பெண்கள் உட்பட சுமார் 122 நபர்கள் இரத்த தானம் செய்தனர். மும்முகாமில் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.